பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்
பொன்னமராவதி நகரில் சனிக்கிழமை (ஏப். 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
பொன்னமராவதி நகரில் சனிக்கிழமை (ஏப். 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொன்னையூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பொன்னமராவதி பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொன்னமராவதி, புதுப்பட்டி, வலையபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.