நாய்கள் கடித்ததால் உயிரிழந்து கிடக்கும் ஆடுகள். 
புதுக்கோட்டை

விராலிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

தினமணி செய்திச் சேவை

விராலிமலை அருகே ஆட்டு மந்தையில் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் 7 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கீழ சின்ன பழனி பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா. வீட்டு அருகே மந்தை அமைத்து இவா் வளா்த்து வந்த செம்மறி ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஐந்துக்கும் மேற்பட்டதெருநாய்கள் சனிக்கிழமை கடித்ததில் 7 ஆடுகள் பலியாகின. மேலும் பல ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதுகுறித்து கருப்பையா கூறுகையில், ஆடுகள் வளா்ப்பு மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நான் குடும்பத்தை நடத்தி வரும் நிலையில், தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததால் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு எனக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றாா்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT