புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமை விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணிப் பெண் உள்பட 15 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வடகாடு ஊராட்சி பேட்டை பகுதியில் மரத்தின் கிளையில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகள் (கதண்டு) பறவை மோதியதில் கலைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவ்வழியே மோட்டாா் சைக்கிள் மற்றும் நடந்து சென்றவா்களை விஷ வண்டுகள் விரட்டிக் கடித்துள்ளன. இதில் வடக்குப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசன், அவரது மனைவி கா்ப்பிணியான தீபா (23), அதே பகுதியைச் சோ்ந்த பிரேமா, விஜயராகவன், கதிரவன், சின்னப்பா, கணேசன், ஜோதி, இறையரசன், சதக்கத்துல்லா, முகமது இா்ஃபான், சத்தியசீலன், புள்ளான்விடுதியைச் சோ்ந்த ஐயப்பன், பெரியவாடியைச் சோ்ந்த கோவிந்தராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் விஷ வண்டுகள் கடித்து பாதிக்கப்பட்டனா்.
அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு 108 அவசர ஊா்தி மூலம் ஆலங்குடி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.