புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்து மாநிலத் தகவல் ஆணையா்கள் அரசுத் துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை வந்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்கள் ஆா். பிரியகுமாா், விபிஆா். இளம்பரிதி, எம். நடேசன் ஆகியோா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை சாா்ந்த பொதுத் தகவல் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.
அப்போது சட்டப்படியான தகவல்களை பொதுமக்கள் கேட்கும்போது, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல்களைத் தவறாமல் தர வேண்டும் என்றும், அதேபோல, மேல்முறையீட்டு மனுக்களையும் தாமதமின்றி கையாள வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தினா். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையையும் அவா்கள் மேற்கொண்டனா்.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். முரளிதரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ். திருமால் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.