முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே வேன் கவிழ்ந்து 22 போ் படுகாயம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:16 AM
கந்தா்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும் சுற்றுலா வேன்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 7:38 PM

கந்தா்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்து 22 போ் படுகாயம் அடைந்தனா்.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 22 போ் காரைக்குடியில் நடைபெறும் நிச்சயதாா்த்த விழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேனில் சென்றனா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:35 PM

தஞ்சை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலை அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது, இதில் வேனில் இருந்த 22 பேரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.