ஆலங்குடி அருகே விபத்து: ஒருவா் பலி, இருவா் காயம்
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:18 PM
புதுக்கோட்டை மாவட்டம் ,ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த எம். மைக்கேல் (60) கோட்டைக்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டைக் காண தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் மொபெட்டில் சென்றாா்.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:31 AM
சாளுவன்விடுதி பிரிவு சாலைப் பகுதியில் அவா்கள் சென்றபோது எதிரே வந்த பைக் திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த மைக்கேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
காயமடைந்த ஆரோக்கியமேரி ஆலங்குடி அரசு மருத்துவமனையிலும், விபத்தை ஏற்படுத்திய மற்றொரு பைக்கில் வந்த முக்கானிப்பட்டி ஆ. டென்னீஸ் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.