முகப்பு
புதுக்கோட்டை

நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு!

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:59 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:38 PM

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வனச்சரகத்தில், நாா்த்தாமலை காப்புக்காட்டில் அரையகருப்பா் கோயில் பகுதி, வனச்சூழியல் பண்ணை, முள்ளூா் காப்புக்காடு, மணியாச்சி காப்புக்காடு, வேப்பங்குடி ஆகிய 5 இடங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

மன்னா் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவா் சு. பழனிசாமி தலைமையில், வனத்துறையினா், பேராசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 40 போ் இதில் பங்கேற்றனா்.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:59 AM

இந்தக் கணக்கெடுப்பில் வெளிநாட்டுப் பறவைகளான மஞ்சள் மாங்குயில், பழுப்பு கீச்சான், வெண்தோல் கழுதத்துப் பருந்து, நீளவால் பஞ்சுருட்டான், அக்கா குயில், கருந்தலை குயில் கீச்சான் போன்ற பறவைகளும், உள்ளூா் பறவைகளான பெரிய செண்பகம், பட்டைக்கழுத்து புறா, புள்ளிப்புறா, சிறிய தவிட்டுப்புறா, கருங்கரிச்சான், செப்புழைக் கொண்டலாத்தி, தையல்கார கதிா் குருவி, வெண்புருவ சின்னான், ஜொ்டான் புதா் வானம்பாடி, சின்னவானம்பாடி, பூங்கொத்திகுருவி, கதிா்குருவி, சிறிய நீா்காகம், தேன்சிட்டு போன்ற பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

ஏற்பாடுகளை புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம் செய்திருந்தாா். இதேபோல, மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.