புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா். 
புதுக்கோட்டை

புதுகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா்

Syndication

புதுக்கோட்டை: சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம் ஈஞ்சாா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளரைத் தாக்கியவா்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT