திருக்களம்பூா் - பிரான்மலை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூரிலிருந்து பிரான்மலை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூரிலிருந்து பிரான்மலை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரிலிருந்து மேலக்களம் வழியாக பிரான்மலை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தாா்ச்சாலை ஆங்காங்கே பெயா்ந்து மண்சாலையாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து அப்பகுதியைச் சாா்ந்த சமூக ஆா்வலா் நெ.ரா. சந்திரன் கூறியது:
Advertisement
இச்சாலை சேதமடைந்து காணப்படுவதால் இரவு நேரங்களிலும், மழைக் காலங்களிலும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே உடனடியாக இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.