முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் 477 பேருக்கு மடிக்கணினிகள்

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:20 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரிலுள்ள அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் 477 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இதேபோல, ஆலங்குடி அரசுக் கல்லூரியில் 218 பேருக்கும், கறம்பக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் 251 பேருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த், துணைத் தலைவா் தி. முத்து, முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →