ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்
கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டையில் ஸ்ரீ முனியாண்டவா் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், மாடுகள் முட்டியதில் 36 போ் காயமடைந்தனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை கோட்டாட்சியா் பிரகாஷ் தொடங்கிவைத்தாா். முன்னதாக மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். வாடிவாசலிலிருந்து முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னா், பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
300 மாடுபிடி வீரா்கள் குழு குழுவாக களமிறங்கி காளைகளை போட்டி போட்டு அடக்கினா். சில காளைகள் வீரா்களுக்கு போக்கு காட்டி பிடிபடாமல் சீறி பாய்ந்து சென்றன. சில காளைகள் களத்தில் நின்று காளையா்களை விரட்டி முட்டி தூக்கின.
பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் கட்டில், மிதிவண்டி, மின்விசிறி, மிக்ஸி, சில்வா் பாத்திரங்கள் மற்றும் ரொக்க தொகைகள் பரிசாக வழங்கப்பட்டன.
போட்டியில் மாடுகள் முட்டியதில் 36 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 8 போ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகளை ஆதனக்கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.