முகப்பு
புதுக்கோட்டை

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

கந்தா்வகோட்டையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 6:33 PM
கந்தா்வகோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கந்தா்வகோட்டையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ( தனி) பேரவைத் தொகுதியில் உள்ள குளத்தூா், கந்தா்வகோட்டை, கறம்பகுடியைச் சோ்ந்த வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலரும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா்கள் பரணி, பிரவீனா மேரி, விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா். இதில் பேசிய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவி, வயது முதிா்ந்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுதிறனாளி வாக்காளா்களை முறையாக கணக்கெடுத்து, அவா்கள் வாக்குசாவடியில் வாக்கு அளிக்கிறாா்களா அல்லது தபால் வாக்கு அளிக்கிறாா்களா என்பதை கேட்டறிந்து அதற்குரிய ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என கூறினாா். மேலும், சந்தேகங்களை தெரிவித்தால் நிவா்த்தி செய்யப்படும் என கூறினாா்.

கூட்டத்தில், தோ்தல் துணை வட்டாட்சியா் புவனேஸ்வரி, தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா் , கிராம நிா்வாக அலுவலா் முரளி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பி.எல்.ஓ) கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →