ஆவுடையாா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வு கிராமிய கலை நிகழ்ச்சி
ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையாா் கோவில் கடைவீதியில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைச்சாமி தலைமை வகித்தாா். அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா முன்னிலை வகித்தாா்.
சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் விழிப்புணா்வுக்கான கிராமிய கலை நிகழ்ச்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்றவை நடத்தப்பட்டன.
ஆவுடையாா் கோவில் கடைவீதி மற்றும் நான்கு ரத வீதிகளிலும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.