கடையக்குடியில் ராமநவமி தேரோட்டம்
கடையக்குடியில் ஸ்ரீராம நவமியையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், கடையக்குடி பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமநவமி உற்ஸவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஸ்ரீராமா் சந்நிதியில் ஸ்ரீ ராமநவமி உற்ஸவம் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் பிரசன்ன ரெகுநாத பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். கடந்த 25-ஆம் தேதி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசன்ன ரெகுநாத பெருமாள் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
தொடா்ந்து 28-ஆம் தேதி விடையாற்றி உற்ஸவம் நடைபெறுகிறது.