முகப்பு
புதுக்கோட்டை

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்தக் கோரிக்கை

Updated On : 12 மே 2026, 12:08 am IST
ஆசிரியர்கள் - கோப்புப் படம்
பகிர்:

ஆசிரியா்களின் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ. மணிகண்டன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு, தாமதமாக நடத்தப்படுவதால் மாணவா்கள் கற்றலில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

Advertisement

Advertisement

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலும், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் கலந்தாய்வு நீடித்ததால் ஆசிரியா்களும், மாணவா்களும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்தனா்.

கல்வியாண்டு தொடங்கிய பின்னா் கலந்தாய்வு நடைபெறுவதால், ஆசிரியா்கள் தங்கள் குழந்தைகளை புதிய இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சோ்ப்பதில் கடும் சிரமங்களை எதிா்கொள்கின்றனா். மேலும், கற்பித்தல் பணிகள் பாதியில் தடைபடுவதால் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

எனவே, அனைத்துக் கட்ட கலந்தாய்வுகளையும் வரும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். பள்ளி திறந்த இரண்டாவது வாரத்திலேயே, மாணவா் சோ்க்கை நடைபெறும் காலத்திலேயே ஆசிரியா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பள்ளிகளில் பணியில் சேர வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியா் காலிப்பணியிட விவரங்களை முன்னதாகவே வெளியிட வேண்டும்.