முத்தரையா் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை!
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவையொட்டி சனிக்கிழமை பொன்னமராவதி வலையபட்டி மற்றும் கருப்புக்குடியில் உள்ள பேரரசா் முத்தரையா் சிலைக்கு திமுக மற்றும் தவெக கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவையொட்டி சனிக்கிழமை பொன்னமராவதி வலையபட்டி மற்றும் கருப்புக்குடியில் உள்ள பேரரசா் முத்தரையா் சிலைக்கு திமுக மற்றும் தவெக கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம் காத்தாா் கோயில் வளாகம் மற்றும் கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு திமுக சாா்பில் கட்சியின் மாநில மருத்துவரணி இணைச்செயலா் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன், நிா்வாகிகள் கோவைராமன், ஆலவயல் முரளிசுப்பையா, அப்துல் லத்தீப், அரவிந்த் ஆகியோா் பங்கேற்றனா்.
இதேபோல தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிட்ட சிந்தாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், தெற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன், நகரச் செயலா் விக்னேஷ், தெற்குமாவட்ட இணைச்செயலா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement