தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் பேராவூரணி கிளை நிர்வாகிகள் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கெளரவ தலைவராக பொன்.ராமசாமி, தலைவராக மா.கோபால், செயலாளராக எம்.எஸ்.நீலகண்டன், பொருளாளராக ஏ.சுலைமான், துணைத்தலைவர்களாக ஏ.வீரா, ஏ.வீரப்பன், துணைச்
செயலாளர்களாக சித.சீனிவாசன், எஸ்.கருப்பையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம்.சுந்தர்ராஜன், எஸ்.பி.எஸ்.ஜி. நீலகண்டன், ஏ.முகமது மைதீன், எஸ்.கே.எம்.காசியார், சிவ.ரவி, ஏ.சின்னப்பா, எல்ஐசி மாணிக்கம், எம்.அம்மையப்பன், பி.பாலு,
வி.பழனியப்பன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.