முகப்பு
தஞ்சாவூர்

இயற்கை விவசாய யுக்திகளால் லாபமீட்ட வேண்டும்

விவசாயிகள் இயற்கை விவசாய யுக்திகளைக் கையாண்டு லாபமீட்ட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

விவசாயிகள் இயற்கை விவசாய யுக்திகளைக் கையாண்டு லாபமீட்ட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டையில் விவசாயிகளுக்கான மாநில அளவிலான பொருளாதாரத் தன்னிறைவுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.  கோவை மனுநீதி அறக்கட்டளை,  புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கை  தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் பேசியது:
விவசாயிகள் இருக்கும் நீரைப் பயன்படுத்தி, இயற்கை விவசாய யுக்திகளைக் கையாண்டு, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி லாபமீட்ட வேண்டும். அரசு அதிகாரிகள் அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும். நாட்டு இன மாடுகளை அபிவிருத்தி செய்து, விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்றார்.
தலைமை வகித்த மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் மாணிக்கம் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வனத் தோட்டக் கழகத்தின் 75,000 ஹெக்டேரில் உள்ள  வனஸ்பதி காடுகள் பல்லுயிர்க் காடுகளாக மாற்றப்பட வேண்டும்.  மாயனூர் அணை மூலம் வெள்ளாறு, அக்கினியாறுகளை இணைத்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும். உயர் தொழில்நுட்பங்களை கொண்டு இயற்கை வேளாண்மை மூலம் விவசாயிகள் லாபமீட்டி தன்னிறைவு பெற வேண்டும் என்றார்.
ஜி.எஸ். தனபதி, ஆதப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் விற்பனைத் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், கூட்டுறவு இணைப் பதிவாளர் மிருனாளினி, வேளாண் துணை இயக்குநர்  சேட்முகமது அரிமளம் உதவி வேளாண் இயக்குநர் காளிமுத்து, விருத்தி நிறுவன சத்தியமூர்த்தி, கோவை மேக் இந்தியா ராதாகிருஷ்ணன்,  அப்பாவு பாலாண்டார் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் யுக்தி குறித்தான கையேடு வழங்கப்பட்டது. கருத்தரங்கில் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை உணவுப் பொருட்கள், இயற்கை விவசாய இடுபொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கண்காட்சி ,விற்பனை நடைபெற்றது.  இயற்கை வேளாண்மையில் 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →