தஞ்சாவூர்

பள்ளியில் பிளஸ் 2 மாணவர் மர்மச் சாவு

DIN

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள வளப்பக்குடி நடுப்படுகை வடக்கு வாய்க்கால்காரத் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது முதல் மகன் சதீஷ்பாபு (17). இவர் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தம்பி சந்தோஷும் இதே பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்த சதீஷ்பாபு சக மாணவர்களுடன் சகஜமாக பேசியுள்ளார். தொடர்ந்து அவரைக் காணவில்லையாம். இந்த நிலையில் மாணவர்கள் தங்களது வகுப்பறைக்கு சென்ற போது, அங்கிருந்த மின்விசிறியில் நைலான் கயிறால் சதீஷ்பாபு மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்துள்ளார்.  அவர் ஏன் இறந்தார் என்பது தெரியவில்லை.
பள்ளி முதல்வர் தமிழ்ச்செல்வி அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த  திருக்காட்டுப்பள்ளி போலீஸார்,
சதீஷ்பாபுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 மாணவர் இறந்த இடத்தை தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் தலைமையிலான போலீஸாரும்,  பூதலூர் வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முதல்கட்டமாக, பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ள போலீஸார்,   பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் சதீஷ்பாபு ஏன், எதற்காக இறந்தார், உண்மையாகவே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தொங்கவிட்டனரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT