தஞ்சாவூர்

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

DIN

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கவியரசன்(26). அதே தெருவில் வசித்து வரும் சேகர், தர்மராஜ், கண்ணதாசன், வினோத்குமார், மாதவன் உள்ளிட்ட ஐந்து பேரும் முன்விரோதம் காரணமாக கவியரசனை அரிவாளால் வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த கவியரசன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இதனிடையே,  சேகரை அதே தெருவில் வசித்து வரும் கலையரசன், கவியரசன் இருவரும் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கினார்களாம்.  இதில் பலத்த காயமடைந்த சேகர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து,  தர்மராஜ்(28), கண்ணதாசன்(30), வினோத்குமார்(24), மாதவன்(23), கலையரசன்(22) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT