தஞ்சாவூர்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய, மாநில அரசுளைக் கண்டித்து தஞ்சாவூரில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் சி.முருகேசன் தலைமை வகித்தார்.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டக்காரர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பது, கருத்துரிமை, எழுத்துரிமையை மறுப்பது போன்ற மத்திய, மாநில அரசுகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ.நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கோ.ஜெய்சங்கர், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் நா.வைகறை, சமவெளி விவசாயிகள் இயக்கத் தலைவர் சு.பழனிராசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT