தஞ்சாவூர்

இளைஞரிடம் செல்லிடப்பேசியை பறித்த இருவர் கைது

DIN


பாபநாசம் ஒன்பத்துவேலி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் அகஸ்டின் (18). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜான் செல்வராஜ் நகரில் செல்லிடப்பேசியில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், அகஸ்டினை வழிமறித்து அவரிடம் இருந்த செல்லிடப்பேசியை பறித்ததுடன், அவரிடமிருந்த 500 ரூபாயையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். அகஸ்டின் கூச்சலிடவே, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், அவர்கள் கும்பகோணம் அரிய திடல் திருவள்ளுவர் நகர் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் சிவா (19), அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் சந்துரு (19) என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக அகஸ்டின் அளித்த புகாரின்பேரில், சிவா, சந்துரு ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ஜார்க்கண்ட் அமைச்சர்!

பதஞ்சலியின் 14 மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா? உச்சநீதிமன்றம் கேள்வி

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

SCROLL FOR NEXT