தஞ்சாவூர்

உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி

DIN

முன்னாள் முதல்வரும்,  திமுக தலைவருமான கருணாநிதி மறைவுச் செய்தி அறிந்து,  அதிர்ச்சியில் மரணமடைந்த பேராவூரணி வட்டம்,  வலப்பிரமன்காட்டை சேர்ந்த முன்னாள் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சி.முத்துலிங்கம் குடும்பத்துக்கு திமுக சார்பில் குடும்பநல நிதி உதவியாக ரூ. 2 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது  .
தஞ்சை மாவட்ட திமுக செயலாளரும்,  திருவையாறு எம்எல்ஏவுமான 
துரை. சந்திரசேகரன்,  உயிரிழந்த முத்துலிங்கம் வீட்டுக்கு சென்று அவரது மனைவி  சுமதியிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது,   முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணாதுரை,  திமுக பேராவூரணி ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் என். அசோக்குமார்,  முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ்,  ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT