தஞ்சாவூர்

தூய்மைப் பணி உறுதிமொழி ஏற்பு

DIN

பாபநாசம் ஒன்றியம், கோபுராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பெருமாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகளுக்கான தன்னார்வ தொண்டு செய்திட புதன்கிழமை உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றிய ஆணையர் நாராயணண் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிகளில் முழுமையான தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்,  சுகாதார பணியை நாள்தோறும் செய்திட வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன், பள்ளித் தலைமை ஆசிரியர் சுரேந்திரநாத், ஆசிரியர்கள் செந்தில்குமார், ஜெயராஜ், மகேஸ்வரி, ஊராட்சி செயலர் சித்தரஞ்சன், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT