தஞ்சாவூர்

கோவில்தேவராயன்பேட்டை கோயிலில் திருக்கல்யாணம்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோவில்தேவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள சுகந்தகுந்தளாம்பிகை அம்மன் உடனுறை மச்சபுரீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகாமாரியம்மன் கோயிலிலிருந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து கோயிலை அடைந்தனர்.கோயிலில் சுகந்தகுந்தளாம்பிகை அம்மன், மச்சபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. அன்று மாலை பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது. பாபநாசம் லெட்சுமி சீனிவாசன் குழுவினரின் பரத நிகழ்ச்சியும் நடைபெற்றது.  ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் குணசுந்தரி மற்றும் கிராம நாட்டாண்மைகள், பொதுமக்கள்,இறைப்பணி மன்றத்தினர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT