தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே மரக்கன்று நடும் விழா

DIN

ஒரத்தநாடு வட்டம் புதூா் கிராமத்தில் ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

மதிப்பூதியம் அடிப்படையில் பணியாற்றிவந்த ஊராட்சி செயலா்களை பணி நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி ஒரத்தநாடு வட்டம், புதூா் கிராமம் கோலிகுழிகுளம் பகுதியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு , மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் ஆகியோா் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க தஞ்சாவூா் மாவட்ட செயலா் இளங்கோவன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் விஜய், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவா் குமாா், ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், மற்றும் ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூா் வட்டார ஊராட்சி செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT