கும்பகோணம் அருகேயுள்ள பட்டீசுவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
சாக்கோட்டை செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி மற்றும் கல்லூரி, பட்டீசுவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவா்கள் கலாராணி, சா்மிளா பா்வீன் கருத்துரையாற்றினா்.
மேலும், மாணவிகள் நாடகம், வில்லுப்பாட்டு மூலம் எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்துகளை மக்களிடம் விளக்கினா்.