தஞ்சாவூர்

படைவெட்டி மாரியம்மன் கோயிலில் மாசி மாத வீதி விழா தொடக்கம்

கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 131-வது மாசி மாத வீதி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 131-வது மாசி மாத வீதி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத திரு நடன வீதியுலா நடைபெறும். இதன்படி, மாசி மாதத்தை முன்னிட்டு, பிப். 4-ம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிப். 17-ம் தேதி முதல் பச்சை காளி, பவளக் காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு பிப். 20-ம் தேதி வரை கும்பகோணம் நகரப் பகுதியில் வீதியுலா நடைபெறவுள்ளது. 21-ம் தேதி இரவு திருநடனக்காட்சியுடன் கோயிலை அடைகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT