தஞ்சாவூர்

அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

DIN

தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதி நல்லவன்னியன் குடிகாடு நத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் பிரபாத் (29). இவர் 2010, ஏப். 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செண்பகபுரம் சண்முகநாதன் நகரைச் சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ் (34) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சுரேஷை பிரபாத் முந்தி சென்றார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரபாத்தை சுரேஷ் அரிவாளால் வெட்டினார். இதில் பிரபாத் பலத்தக் காயமடைந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சுரேஷை 2018 ஆம் ஆண்டில் கைது செய்தனர். இதுதொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி அய்யப்பன் பிள்ளை விசாரித்து, சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT