தஞ்சாவூர்

பாபநாசத்தில் திருவள்ளுவர் தின விழா

DIN

பாபநாசத்தில் உலக திருக்குறள் மையம் சார்பில் திருவள்ளுவர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பாபநாசம் உலக திருக்குறள் மைய தலைவர் ஜெய.மனோகரன் தலைமை வகித்தார். பொருளாளர் த. அன்பழகன், துணைத் தலைவர் ரகுபதி, இணைச் செயலாளர்கள் விஜயகுமார்,சிவராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும்  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜசேகர் கலந்துகொண்டு,  பாபநாசம் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறளின்  சிறப்புகள் பற்றி பேசினார். தொடர்ந்து,  திருவள்ளுவர் உருவப்பட ஊர்தி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
விழாவில் லயன்ஸ் சங்க மாவட்டத்  தலைவர் டி. ஆறுமுகம், வழக்குரைஞர் அரியராஜ பூபதி, தேசிய நல்லாசிரியர் எஸ். கலைச்செல்வன், வாய்மை அறக்கட்டளை நிறுவனர் உமாபதி, அன்னை சாரதா மகளிர் மன்ற தலைவி  தில்லைநாயகி மற்றும் பாபநாசம் உலக திருக்குறள் மைய நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், பாபநாசம் ஓய்வூதியர்கள் சங்கம், பாபநாசம் கலை, இலக்கியம், அறிவியல் மன்றம், பாபநாசம் வாய்மை அறக்கட்டளை, அறம் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக,  உலக திருக்குறள் மைய செயலாளர் கு.ப. செயராமன் வரவேற்றார். நிறைவில் மைய துணைத் தலைவர்  குருசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT