தஞ்சாவூர்

அரிசி ஆலையில்  பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் ஊழியர் பலி

DIN

பட்டுக்கோட்டையை அடுத்த நைனாங்குளம் கிராமத்தில் தனியார் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் நெல் அவியல் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. 
அப்போது, எதிர்பாராமல் ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து சிதறியது.
இதில், பலத்த காயமடைந்த ஆலை ஊழியர்கள் பாபநாசம் வட்டம், செண்பகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (40), பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (45) ஆகியோர்  உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் உயிரிழந்தார். நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT