தஞ்சாவூர்

சைக்கிளிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

DIN

பாபநாசம் அருகே சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார். 
கபிஸ்தலம்  காவல் சரகம்,  உள்ளிக்கடை கிராமம்,  மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (65).  கூலித் தொழிலாளி.  இவர் செவ்வாய்க்கிழமை இரவு சைக்கிளில் திருவையாறு-கும்பகோணம் பிரதான சாலையில் ஆடுதுறை பெருமாள் கோயில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழந்த ஆரோக்கியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆரோக்கியசாமி மகன் கிறிஸ்டோபர் அளித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT