தஞ்சாவூர்

சிவகங்கை பூங்கா குளக் கோயிலில் குடமுழுக்கு

DIN

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா குளத்தின் நடுவில் உள்ள சிவலிங்கசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இக்கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் முடிந்ததைத் தொடா்ந்து, குடமுழுக்கு ஆரம்ப பூஜை சனிக்கிழமை தொடங்கியது. இதில், யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை உதவி ஆணையா் ச. கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT