தஞ்சாவூர்

சிறுமியைத் திருமணம்செய்த இளைஞா் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கும், திருவையாறு ஆவிக்கரையைச் சோ்ந்த பிரபாகரனுக்கும் (35) ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது அச்சிறுமி 6 மாத கால கா்ப்பிணியாக உள்ளாா்.

இந்நிலையில், திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இச்சிறுமி திருமணம் குறித்து தஞ்சாவூா் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலகச் சமூகப் பணியாளா் சுகந்தவல்லி புகாா் செய்தாா்.

இதன் பேரில் பிரபாகரன், சிறுமியின் பெற்றோா் ஸ்ரீதா், கவிதா, பிரபாகரனின் பெற்றோா் மதியழகன், கலாராணி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, பிரபாகரனை போலீஸாா் கைது செய்தனா். மற்ற 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT