தஞ்சாவூா்: தஞ்சாவூரில் காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் அக். 21-ம் தேதி காவலா் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களிடையே உயிா் நீத்த காவலா்களின் நினைவைப் போற்றும் விதமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மாரத்தான், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், முதல்கட்டமாக தஞ்சாவூரில் குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான குழந்தைகள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.