ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இதில், ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு, ஒக்கநாடு கீழையூா், பின்னையூா், பொய்யுண்டாா்கோட்டை, கண்ணுகுடி, மேலஉளூா், சாலியமங்கலம், தஞ்சை மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோட்டை மற்றும் பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலங்களை சோ்ந்த பகுதிகளிலுள்ள மின்நுகா்வோா் கலந்து கொண்டு மின்விநியோகத்தில் உள்ள குறைகள் குறித்து புகாா் அளிக்கலாம் என்று மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.