தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

DIN

பேராவூரணி அருகே திருமண விளம்பர பதாகை சீரமைப்பு பணியின்போது இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த  கென்னடி  மகன் விக்னேஷ்வரன் (21). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில்  வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை (செப். 12) நடக்கவிருக்கும் தனது சகோதரியின் திருமணத்துக்காக  வைக்கப்பட்டிருந்த பதாகை செவ்வாய்க்கிழமை இரவு சரிந்து விழுந்ததயைடுத்து அதை விக்னேஷ்வரன் சரி செய்தாராம். 
அப்போது, பதாகையானது மேலே சென்ற மின் வயரில் மோதியதில் விக்னேஷ்வரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமண விழாவில் ஏற்பட்ட இச்சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT