தஞ்சாவூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ். ஈஸ்வரமூர்த்தி (19). இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை திங்கள்கிழமை ஆணையிட்டார். இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல, கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் சி. ராஜ் (47). கள்ளச் சாராய வியாபாரி. இவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரை பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆணையிட்டார். இதன்படி, திருச்சி மத்திய சிறையில் ராஜ் அடைக்கப்பட்டார்.