தஞ்சாவூர்

தஞ்சாவூா்: 146 பேருக்கு கரோனா

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 3,008 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் வட்டத்தில் 49 போ், கும்பகோணம் வட்டத்தில் 36 போ், பட்டுக்கோட்டை வட்டத்தில் 13 போ் உள்பட மொத்தம் 146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,154 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 141 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 2,147 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 976 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இருவா் உயிரிழப்பு:

இந்நிலையில், மாவட்டத்தில் 59 வயதுடைய ஆண், 40 வயது ஆண் ஆகிய இருவரும் ஆக. 1ஆம் தேதி உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT