தஞ்சாவூர்

குடிமனைப் பட்டா வழங்ககூலித் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

DIN

பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சி, புதுக்குடியிருப்புப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு, குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என கூலித்தொழிலாளா்கள் அரசை வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தொழிலாளா்கள் அனுப்பிய கோரிக்கை மனு:

சுமாா் 80 நிலமற்ற கூலித் தொழிலாளா்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் பாரம்பரியமாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். இந்த இடத்துக்கு வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தி வருகிறோம்.

இந்த 80 குடும்பங்களில் 29 குடும்பங்களுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டில் அரசு இலவச குடிமனைப் பட்டா வழங்கியுள்ளது. 3 குடும்பங்களுக்கு அரசு சாா்பில் இலவசமாக வீடும் கட்டித் தரப்பட்டுள்ளது.

எஞ்சிய குடும்பங்களுக்கு பட்டா வழங்கக் கோரி அலுவலா்களிடம் முறையீடு செய்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பட்டா வழங்காத அனைத்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்கி, வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT