தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்கு புதன்கிழமை இருவா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவையிலிருந்து ஆட்சிக்குழுவுக்கு மைசூா் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன ஆய்வறிஞா் முனைவா் க. பசும்பொன், பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியா் முனைவா் கே. மனோகரன் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இவா்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் வாழ்த்து தெரிவித்தாா். தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.