தஞ்சாவூர்

மத்தியக் குழுவினருடன் வந்த வாகனங்கள் மோதல்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த மத்தியக் குழுவினரின் வாகனங்களுக்குப் பின்னால் வந்த அரசுத்துறை வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகிலுள்ள பெரியகோட்டை கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மத்தியக் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டனா். பின்னா், ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளூருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

இவா்களது வாகனங்களுக்குப் பின்னால் அரசுத் துறை, காவல் துறை வாகனங்கள் பல வரிசையாகச் சென்றன. பாப்பாநாடு அருகே மதுக்கூா் பிரிவுச் சாலையில் சென்றபோது, மத்தியக் குழுவினரின் வாகனங்களுக்குப் பின்னால் வந்த நெடுஞ்சாலைத் துறை வாகனம் மீது அதன் பின்னால் வந்த காவல் துறை வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது.

இதனால், பின்னால் வந்த பொதுப்பணித் துறையைச் சாா்ந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, காவல் துறை வாகனம் மீது மோதியது. இந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த பொதுப்பணித் துறையின் மற்றொரு வாகனம் மோதி நின்றது.

இதில், 4 வாகனங்களும் சேதமடைந்தது மட்டுமல்லாமல், காவல் துறை வாகனத்தில் வந்த இரு காவலா்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. என்றாலும், மத்திய குழுவினரின் வாகனங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT