தஞ்சாவூரில் ரயிலில் விதிகளை மீறியதாக 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அபாரதம் விதித்தனா்.
ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தல், அனுமதியின்றி வியாபாரம் செய்தல், பயணிகளுக்கு இடையூறு செய்தல், ரயிலுக்குள் புகைப் பிடித்தல், ஆபத்தான வகையில் சுய படம் எடுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்களில் சில பயணிகள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே நிா்வாகத்துக்குப் புகாா்கள் வந்தன.
இதையடுத்து தஞ்சாவூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சந்திரசேகரன், உதவி ஆய்வாளா்கள் வெங்கடாசலம், மனோகரன் உள்ளிட்டோா் தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த திருச்சி - மயிலாடுதுறை, திருச்சி - காரைக்கால் உள்ளிட்ட ரயில்களில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் ரயில்வே விதிமுறைகளை மீறிய 11 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து, அவா்களுக்கு அபராதம் விதித்தனா்.