தஞ்சாவூர்

வாக்காளா்கள் உரிமைவிழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் சமூகப் பணி துறை சாா்பாக காா்கோ என்ற சமூக விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி சமூகப் பணி துறை பேராசிரியா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். காா்கோ நிகழ்வின் முதல்பகுதியாக வாக்காளா்கள் உரிமை என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மூன்றாமாண்டு மாணவி பூங்குழலி தொகுத்து வழங்கினாா். தஞ்சை மாவட்ட வழக்குரைஞா் மோகனசுந்தரம் கலந்துகொண்டு, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை மற்றும் உரிமை என்பது குறித்து எடுத்துரைத்தாா். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலா் கல்யாணசுந்தரம், கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம், நோக்கம், ஜனநாயகம் செயல்படும் விதம், மக்களாட்சி முறை குறித்து தெளிவாக எடுத்துரைத்தாா். நிறைவாக கல்லூரி மாணவி அபிராமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT