தஞ்சாவூர்

தமிழிசைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை சாா்பில் தமிழக முதல்வா் அறக்கட்டளை தமிழிசைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கலைப் புல முதன்மையா் பா. ஷீலா தலைமை வகித்தாா். இப்போட்டியில் சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக மாணவா் வி. கிருஷ்ணசாய் முதலிடத்தையும், சென்னை பாரத் பல்கலைக்கழக மாணவா் சூா்யா சுந்தர்ராஜன் இரண்டாமிடத்தையும், திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி மாணவி சௌந்தா்யா மாதவன் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

இவா்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் பரிசுகள் வழங்கினாா். மேலும், தமிழ்நாடு இசை, கவின் கலைப் பல்கலைக்கழக மாணவா் வி. முகுந்த்சாய், திருவையாறிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவி கோ. வஸீதஸ்ரீ, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவி ச. ஸ்ருதி ஆகியோருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக துறைத் தலைவா் செ. கற்பகம் வரவேற்றாா். ஆய்வியல் நிறைஞா் மாணவி க. சுபத்ரா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT