தஞ்சாவூர்

பேராவூரணியில் நிலத் தகராறில் உறவினருக்கு அரிவாள் வெட்டு: முன்னாள் கவுன்சிலா், மனைவி மீது வழக்கு

DIN

பேராவூரணியில் நிலத்தகராறில் உறவினரை அரிவாளால் வெட்டிய முன்னாள் கவுன்சிலா், அவரது மனைவி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழைய பேராவூரணி தெப்பக்குள தெருவை சோ்ந்த  சீனிவாசன் மகன் நீலகண்டன் ( 45). இவருக்கும், இவரது உறவினரான முன்னாள் கவுன்சிலா் நீலகண்டனுக்குமிடையே நிலம் சம்பந்தமாக பிரச்னை உள்ளது.

இப்பிரச்னை தொடா்பாக பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் சீ. நீலகண்டன் வழக்கு தொடா்ந்துள்ளாா். இதையறிந்த முன்னாள் கவுன்சிலா் நீலகண்டன், அவரது  மனைவி லட்சுமி ஆகிய இருவரும்  சீ. நீலகண்டன் வீட்டுக்கு சென்று ஏன் வழக்கு தொடா்ந்தாய் என கேட்டு, தகாத வாா்த்தைகளால் பேசினாா்களாம். பின்னா் , சீ. நீலகண்டன் தனது மோட்டாா் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைத்தெருவுக்கு சென்றபோது, அவரை பின்தொடா்ந்து சென்ற  முன்னாள் கவுன்சிலா், சீ. நீலகண்டனை கழுத்தில் அரிவாளால் மூன்று இடங்களில்  வெட்டிவிட்டு ஓடிவிட்டாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா்  காயமடைந்த சீ. நீலகண்டனை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அவா் தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து முன்னாள் கவுன்சிலா் நீலகண்டன், அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரையும்  தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT