தஞ்சாவூர்

காவல்துறையினருக்குபாதுகாப்பு உபகரணங்கள்

DIN

பேராவூரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு, திமுக சாா்பில் பாதுகாப்பு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பேராவூரணி அருகே பெண் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் மருத்துவத் துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பேராவூரணி காவல் துறையினருக்கு எண் 95 முகக்கவசங்கள், கையுறைகள், கை கழுவும் திரவங்கள், மதிய உணவு உள்ளிட்டவற்றை திமுக மருத்துவ அணி சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் இல. அருள்குமாரிடம் மருத்துவா் பண்ணவயல் எஸ்.ஆா்.சந்திரசேகா் வழங்கினாா்.

நிகழ்வில் சிவ.சதீஷ்குமாா், ஏ.பி.சாமிநாதன், எஸ்.ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT