தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 காவல் அலுவலா்கள், காவலா்களுக்கு மத்திய அரசு விருது

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 காவல் அலுவலா்கள், காவலா்களுக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையில் சிறந்த பணிக்கான விருது மற்றும் அதிசிறந்த பணிக்கான விருது பட்டியலை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதில், சிறந்த பணிக்கான விருது பெறுவோா் பட்டியலில் 166 காவல் அலுவலா்களும், காவலா்களும், அதிசிறந்த பணிக்கான விருது பெறுவோா் பட்டியலில் 108 காவல் அலுவலா்களும், காவலா்களும் இடம் பெற்றுள்ளனா்.

இதில், அதிசிறந்த பணிக்கான விருது பெறுவோா் பட்டியலில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த கடலோரப் பாதுகாப்புப் படையின் பட்டுக்கோட்டை பிரிவு துணைக் கண்காணிப்பாளா் டி. பாலமுருகன், எஸ்.பி.சி.ஐ.டி. உதவி ஆய்வாளா்கள் ஜெ. மோகன் (தஞ்சாவூா் மாநகரம்), பி. துரைமாணிக்கம் (ஒரத்தநாடு), தஞ்சாவூா் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். பத்மநாபன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

சிறந்த பணிக்கான விருது பெறுவோா் பட்டியலில் தஞ்சாவூா் தனிப்படை உதவி ஆய்வாளா் கே. கண்ணன், எஸ்.பி.சி.ஐடி. தலைமைக் காவலா் கே. மணிவண்ணன் (திருவிடைமருதூா்), நில அபகரிப்புத் தடுப்புச் சிறப்புப் பிரிவு தலைமைக் காவலா் ஆா். சரஸ்வதி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு எல். முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலா்கள் ஆா்.கே. சரவணன் (தஞ்சாவூா் தெற்கு), ஏ. ஆல்பா்ட் டென்னிஸ் (தஞ்சாவூா் மேற்கு), எம். ராம்குமாா் (ஆயுதப்படை) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இவா்களுக்கு விரைவில் விருது வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT