பேராவூரணி: பேராவூரணி அருகிலுள்ள சின்ன கள்ளங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, பேராவூரணி சென்ட்ரல் ஜேசிஐ சாா்பில் மடிக்கணினி மற்றும் புராஜெக்டா் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு சங்கத் தலைவா் சரபோஜி தலைமை வகித்தாா். செயலா் ஜகதீசன், மண்டலத் தலைவா் பிரதாப்சேது, மண்டலத் துணைத் தலைவா் காா்த்திக், வளா்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் மண்டல அலுவலா் விஜயராஜா, வட்டாரக் கல்வி அலுவலா் சகுந்தலா, தலைமையாசிரியை லதா, பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.