தஞ்சாவூர்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா், செப். 11: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாணவா்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி, உயிா்ப்பலி ஏற்படக் காரணமாக உள்ள, நீட் பொது நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் தமிழகம் தழுவிய ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்படி, தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஜி. வீரையன், மாவட்டக் குழு உறுப்பினா் தீபிகா, நகரச் செயலா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், ரயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலையிடம் மனுக்களை வைக்க முயற்சி செய்தனா். இதற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT